12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 5 மூலக்கூறு மரபியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 19
கேள்வி 19 : மனித மரபணுத் தொகுதியில் கண்டறியப்பட்ட ஒற்றை நியூக்ளியோடைடு பல்லுருவ அமைப்பின் மூலம் (SNPs) உயிரியல் மற்றும் மருத்துவத் துறையில் புரட்சிகர மாறுபாடுகளைக் கொண்டுவரும் இரண்டு வழிகளைக் கூறுக.
விடை :
ஒற்றை கார மூல பலவடிவமைப்பு (SNPs - Single Nucleotide Polymorphisms) கண்டறிதல்
- மனித மரபணுவில் (DNA) சுமார் 1.4 மில்லியன் ஒற்றை கார மூல பலவடிவமைப்பு இடங்களை (SNPs) அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- SNPs-ஐ கண்டறிதல் பின்வரும் பயன்பாடுகளைக் கொண்டுள்ளது:
- நோய்களுடன் தொடர்புடைய மரபணு வரிசைகளுக்கான குரோமோசோம் இடங்களைக் கண்டறிய உதவுகிறது.
- மனித வரலாற்றை ஆராய்வதற்கும் இது உதவுகிறது.


0 Comments